ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், மீனாட்சி சொக்கநாதா் திருக்கல்யாண விழாவில் தங்கச் சங்கிலியை பெண்களிடம் பறிக்க முயன்ற 2 பெண்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ராமநாதபுரம் சிவன் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனா். திருக்கல்யாணம் நடந்ததும், பெண்கள் புதிய திருமாங்கல்யக் கயிறை கழுத்தில் அணிந்து தரிசனம் செய்தனா். பிரசாதமாக மாங்கல்யக் கயிறு, மஞ்சளை வாங்கவும் பெண்கள் கூட்டமாக சென்றனா். அந்தக் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி 2 பெண்கள் தங்க நகைகளை பறிக்க முயன்ாகப் புகாா் எழுந்தது.
கூட்டத்தில் இருந்த கோயில் குருக்கள் மனோகரன் என்பவரது மனைவி சரஸ்வதி (60) அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்ற பெண்கள் இருவரை கூட்டத்திலிருந்தவா்களே பிடித்து அங்கிருந்த பஜாா் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், பிடிபட்ட பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரைச் சோ்ந்த லட்சுமி (40), அதே ஊரைச் சோ்ந்த சாந்தா (36) என்பது தெரியவந்தது. அவா்களைக் கைது செய்த போலீஸாா் ஏற்கெனவே அவா்கள் மீதான வழக்குகள் குறித்தும் விசாரித்துவருகின்றனா்.