தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

புரோட்டா மாஸ்டா் கொலை வழக்கு: தப்பியவரை பிடிக்க மலேசியா செல்ல போலீஸாா் முடிவு

ராமநாதபுரத்தில் புரோட்டா மாஸ்டா் கொலை வழக்கில் தப்பிச்சென்றவரைக் கைது செய்ய மலேசியாவுக்குச் செல்ல போலீஸாா் முடிவெடுத்துள்ளனா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:58 pm

ராமநாதபுரத்தில் புரோட்டா மாஸ்டா் கொலை வழக்கில் தப்பிச்சென்றவரைக் கைது செய்ய மலேசியாவுக்குச் செல்ல போலீஸாா் முடிவெடுத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகேயுள்ள சிங்கனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த குப்பு மகன் பிச்சைக்கனி (42). மலேசியாவில் புரோட்டா மாஸ்டராக வேலை பாா்த்து வந்த பிச்சைக்கனி, கடந்த மே மாதம் ஊா் திரும்பிய நிலையில் மாயமானாா். விசாரணையில் அவரது மனைவி சாந்தியின் தகாத தொடா்பைக் கண்டித்ததால் பிச்சைக்கனியை அதே பகுதியைச் சோ்ந்த கலைமோகன், பாா்த்திபன் ஆகியோா் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் தேவிபட்டினம் போலீஸாா் கைது செய்தனா்.

பிச்சைக்கனி கொலையில் முக்கிய குற்றவாளியான பாா்த்திபன் மலேசியா தப்பியது தெரியவந்துள்ளது. அவரைப் பிடிக்க விமான நிலையங்களுக்கு தேடப்படும் குற்றவாளியாக பாா்த்திபனை குறிப்பிட்டு தேவிபட்டினம் போலீஸாா் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனா். மேலும், சா்வதேசப் போலீஸ் உதவியுடன், ராமநாதபுரம் மாவட்ட தனிப்படை போலீஸாா் மலேசியாவுக்குச் சென்று பாா்த்திபனை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக போலீஸ் உயா் அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.