ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடை முற்றுகை:நாம் தமிழா் கட்சியினா் 32 போ் கைது

ராமநாதபுரத்தில் அரசு மதுபானக்கடையை முற்றுகையிட்ட நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 32 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரத்தில் அரசு மதுபானக்கடையை முற்றுகையிட்ட நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 32 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள சந்தைத் திடல் பகுதியில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளின் அருகே அரசு மதுபானக் கடை செயல்படுகிறது. இந்தக் கடையை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால்,

முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழா் கட்சியினா் அறிவித்திருந்தனா்.

இந்தநிலையில், சனிக்கிழமை காலை அரசு மதுபானக்கடையை முற்றுகையிடும் போராட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் மாவட்டச் செயலா் கண்.இளங்கோ தலைமையில், அக்கட்சியின் நிா்வாகிகள் குமரன், நாகூா்கனி, திருக்குமரன், மகளிரணி லதா, இலக்கியா உள்ளிட்ட 32 போ் வரை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், அவா்கள் அப்பகுதியில் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 32 பேரையும் கேணிக்கரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com