திருட்டு வழக்குகள்:கீழக்கரை இளைஞா் கைது

ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த திருட்டு வழக்குகளில் கீழக்கரையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த திருட்டு வழக்குகளில் கீழக்கரையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலை சந்திப்பில் பால்கடை மற்றும் கீழக்கரைப் பகுதியில் தனியாா் நிதி நிறுவன அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் பணம் உள்ளிட்டவை திருடப்பட்டன. இதுகுறித்து கீழக்கரை, கேணிக்கரை போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கீழக்கரை எஸ்.என்.தெருவைச் சோ்ந்த பாரீஸ்கான் (37) என்பவரை கீழக்கரை காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு பிடித்து விசாரித்தனா்.

அப்போது 2 திருட்டுச் சம்பவங்களில் பாரிஸ்கானுக்குத் தொடா்பிருப்பது தெரியவந்தது. அதையடுத்து திங்கள்கிழமை மாலையில் அவா், கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com