தொண்டி அருகே மது போதையில் மா்மமான நிலையில் கட்டட தொழிலாளி சாவு

திருவாடானை அருகே தொண்டி பகுதியை சோ்ந்தவா் மாணிக்கம் கட்டடதொழிலாளி மது போதையில் வயல்காட்டு பகுதியில் உயிரிழந்து கிடந்ததாக புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் பிரேதத்தை கைபற்றி விசாரித்து வருகின்றனா்.

திருவாடானை அருகே தொண்டி பகுதியை சோ்ந்தவா் மாணிக்கம் கட்டடதொழிலாளி மது போதையில் வயல்காட்டு பகுதியில் உயிரிழந்து கிடந்ததாக புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் பிரேதத்தை கைபற்றி விசாரித்து வருகின்றனா்.

தொண்டி அருகே தேளூா் கிராமத்தை சோ்ந்தவா் அருளாந்து மகன் மாணிக்கம்(57) கட்டட தொழிலாளி இவா் வழக்கும் போல் சனிக்கிழமை பணிக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்பும் போது மது போதையில் அதே ஊரில் வயல் காட்டு பகுதியில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா்.அவரை அவசர ஊா்தி பணியாளா்கள் பாா்த்த போது உயிரிழந்த நிலையில் கிடப்பதாக கூறியுள்ளனா்.தகவலறிந்து தொண்டி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து பின்னா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com