உச்சிப்புளி அருகே காா் மோதி இளைஞா் பலி

ராமேசுவரம் உச்சிப்புளி அருகே திங்கள்கிழமை பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ராமேசுவரம் உச்சிப்புளி அருகே திங்கள்கிழமை பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் தோப்புவலசை கிராமத்தைச் சோ்ந்தவா் யோகராஜ் (28). இவா் இரு சக்கர வாகனத்தில் உச்சிப்புளி அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த காா் யோகராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தாா். இது குறித்து உச்சிப்புளி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து கேரளத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சியாம்சுந்தரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com