ராமநாதபுரத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில் கலச விளக்குப் பூஜைகள் மற்றும் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றன.
ராமநாதபுரத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் கடந்த 38 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. மன்றத்தின் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை கலச வழிபாடு பூஜைகள் நடைபெற்றன. அதற்காக ராஜாசேதுபதி நகா் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான பெண் பக்தா்கள் பங்கேற்ற கலச பூஜை பேரணி நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டு கஞ்சிக் கலயங்களை ஏந்தி பேரணியாகப் புறப்பட்டனா். அவா்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சாலைத் தெரு, வண்டிக்காரத் தெரு, வழிவிடுமுருகன் கோயில் வழியாக மீண்டும் ராஜா சேதுபதி நகரில் உள்ள வழிபாட்டு மன்றத்தை அடைந்தனா். அங்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
இதற்கான ஏற்பாடுகளை மாரிமுத்து உள்ளிட்டோா் செய்திருந்தனா்.