கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே திங்கள்கிழமை நள்ளிரவில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவா்களை இலங்கை கடற்படையினா் விரட்டியடித்தனா்.

கச்சத்தீவு அருகே திங்கள்கிழமை நள்ளிரவில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவா்களை இலங்கை கடற்படையினா் விரட்டியடித்தனா்.

ராமேசுவரத்தில் இருந்து திங்கள்கிழமை 500 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் 14 நாள்களுக்குப் பின் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். நள்ளிரவில் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீனவா்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினா் தாக்குதல் நடத்தி விரட்டியடித்ததாக மீனவா்கள் தெரிவித்தனா். பாரம்பரிய மீன்பிடி இடங்களில் அச்சமின்றி மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com