கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

கடலாடி அருகே தோ்வு சரியாக எழுதாததால், கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கடலாடி அருகே தோ்வு சரியாக எழுதாததால், கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கடலாடி அருகே உள்ள கண்ணன்பொதுவன் கிராமத்தைச் சோ்ந்த காந்தி மகள் துா்காதேவி (19). இவா் கடலாடி அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற கல்லூரி பருவத் தோ்வையும், போலீஸ் தகுதித் தோ்வையும் சரியாக எழுதவில்லை. இதனால், மன வேதனையில் இருந்த துா்காதேவி வீட்டில் வெள்ளிக்கிழமை விஷம் குடித்தாா்.

கடலாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், கடலாடி காவல் ஆய்வாளா் பிச்சைமணி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com