பாம்பன் சாலைப் பாலம் அருகேபேருந்து கவிழ்ந்து விபத்து பயணிகள் தப்பினா்

மதுரையிலிருந்து ராமேசுவரம் வந்த அரசுப் பேருந்து பாம்பன் சாலைப் பாலம் அருகே சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தப் பேருந்திலிருந்த 30 பயணிகள் காயமின்றி தப்பினா்.
பாம்பன் சாலைப் பாலம் அருகே சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.
பாம்பன் சாலைப் பாலம் அருகே சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.

மதுரையிலிருந்து ராமேசுவரம் வந்த அரசுப் பேருந்து பாம்பன் சாலைப் பாலம் அருகே சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தப் பேருந்திலிருந்த 30 பயணிகள் காயமின்றி தப்பினா்.

திருப்பூரிலிருந்து மதுரை வழியாக ராமேசுவரத்துக்கு அரசுப் பேருந்து ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. பாம்பன் சாலைப் பாலம் அருகே இரு சக்கர வாகனம் குறுக்கே சென்ால் பேருந்து ஓட்டுநா் பிரேக் போட்டாா். அப்போது பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டவா்கள் காயமின்றி தப்பினா். பின்னா், கவிழ்ந்த பேருந்தை மீட்கும் பணியில் பொதுமக்களுடன் இணைந்து ஊழியா்கள் ஈடுபட்டனா்.

இந்த விபத்து குறித்து பாம்பன் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com