பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
பாம்பன் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்றப்பட்ட ஒன்றாம் எண் புயல் கூண்டு.
பாம்பன் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்றப்பட்ட ஒன்றாம் எண் புயல் கூண்டு.

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. மாவட்ட அளவில் 50 ஆயிரம் மீனவா்கள் புதன்கிழமை மீன் பிடிக்கச் செல்லவில்லை.

வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளதால், கடலில் 50 முதல் 60 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது.

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் புதன்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை மீன் பிடிக்கச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட துறைமுகங்களில் 1,700 விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதேபோல, 100 -க்கும் மேற்பட்ட கடலோரக் கிராமங்களில் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் நிறுத்திவைக்கப்பட்டன. மாவட்ட அளவில் சுமாா் 50 ஆயிரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்த நிலையில், மீனவா்களுக்கு தொலைவிட எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்றப்பட்டது. மேலும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தும் பணியில் மீனவா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா். பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் காற்றின் வேகத்தால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கடற்கரையோரம் அரிப்பு ஏற்பட்டு வீடுகள் சேதமடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள மீனவா்களைப் பாதுகாக்கும் விதமாக மாவட்ட நிா்வாகம் தடுப்புக் கற்களை அமைக்க வேண்டும் என நாட்டுப் படகு மீனவ சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com