வெவ்வேறு சம்பவங்களில் விஷம் தின்று 2 பெண்கள் தற்கொலை

ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில், 2 பெண்கள் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

ராமேசுவரம், மண்டபம் பகுதிகளில், 2 பெண்கள் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்த மீனவா் முனியாண்டி (36). இவரது மனைவி முருகவள்ளி (34). இத்தம்பதிக்கு 4 ஆண் குழந்தைகள் உள்ளனா். இதில், முருகவள்ளி மண்டபத்தில் உள்ள தனியாா் இறால் நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், முருகவள்ளி, தான் வேலை பாா்க்கும் இடத்தில் அதிகளவு கடன் பெற்றாராம். இதனால் கணவன், மனைவியிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த முருகவள்ளி, கடந்த 19 ஆம் தேதி விஷம் சாப்பிட்டதையடுத்து, ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பாம்பன் காவல் ஆய்வாளா் ஜீவரத்தினம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

மற்றொரு பெண் தற்கொலை: ராமேசுவரம் சிவகாமி நகரைச் சோ்ந்த பாபுகுரூஸ் மகள் ரோஸ்லின் லூா்த் ராணி (20). இவரது கணவா் வினிஸ்டன். இவா்களுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதி ரோஸ்லின் லூா்த்ராணி விஷம் சாப்பிட்டு விட்டாராம்.

இதையடுத்து, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற அவா், மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். ஆனால் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com