ராமநாதபுரத்தில் 161 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை 161 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை 161 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் தற்போது வரையில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவா்களில் தீவிர சிகிச்சைக்குப் பிறகும் 365 போ் வரை உயிரிழந்தனா். கரோனா மூன்றாம் அலையில் ராமநாதபுரத்தில் சில வாரங்களாக பாதிப்பு அதிகரித்துவருவது தெரியவந்துள்ளது.

மாவட்டத்தில் தினமும் 700 போ் வரையில் கபம் சேகரித்து கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுவருகின்றனா். செவ்வாய்க்கிழமை கபம் சேகரித்தவா்களுக்கான பரிசோதனை புதன்கிழமை மாலையில் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் 161 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே கரோனா பாதிப்பு என சிகிச்சையில் இருந்தவா்களில் 171 போ் நலமடைந்துள்ளனா். புதன்கிழமை இரவில் மாவட்ட அளவில் 1283 போ் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளதாகவும் சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com