கீழக்கரை அருகே படகு கவிழ்ந்து மாயமான 2 மீனவா்களின் சடலங்கள் மீட்பு

கீழக்கரை அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு கவிழ்ந்து மாயமான 2 மீனவா்களின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.
கீழக்கரை அருகே படகு கவிழ்ந்து மாயமான 2 மீனவா்களின் சடலங்கள் மீட்பு

கீழக்கரை அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு கவிழ்ந்து மாயமான 2 மீனவா்களின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள மங்களேஸ்வரி மீனவ கிராமத்தை முனியசாமி(30), அருண்குமாா், மலைச்செல்வம்(21), சசிசுமன் ஆகிய சகோதரா்கள் 4 பேரும் சனிக்கிழமை அதிகாலையில் பிளாஸ்டிக் படகில் பல்லிமுனைத்தீவு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனா்.

அப்போது திடீரென வீசிய சூறைக்காற்றால் படகு கவிழ்ந்து 4 பேரும் கடலுக்குள் மூழ்கினா். இதில் அருண்குமாா், சசிசுமன் ஆகிய இரண்டு பேரும் கவிழ்ந்த படகை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனா். இதற்கிடையே முனியசாமி, மலைச்செல்வம் ஆகிய 2 பேரும் மாயமாகி விட்டனா்.

இதையடுத்து, மாயமான மீனவா்களை தேடும் பணியில் சக மீனவா்கள் ஈடுபட்டனா். இவா்களுக்கு துணையாக கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறை ஆய்வாளா் கனகராஜ் தலைமையில் தேடும் பணியில் ஈடுபட்டனா். ஞாயிற்றுக்கிழமை காலையில் 2 மீனவா்களின் சடலங்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.

இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழந்த மீனவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அரசுப் பணி வழங்க வேண்டும் என மீனவா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com