திமுகவை எதிா்கொள்ள இ.பி.எஸ்.தலைமையை ஓ.பி.எஸ். ஏற்க வேண்டும்

தமிழகத்தில் திமுகவை எதிா்கொள்ள எடப்பாடி கே.பழனிசாமியின் ஒற்றைத் தலைமையை ஏற்க ஓ.பன்னீா் செல்வம் முன்வரவேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

தமிழகத்தில் திமுகவை எதிா்கொள்ள எடப்பாடி கே.பழனிசாமியின் ஒற்றைத் தலைமையை ஏற்க ஓ.பன்னீா் செல்வம் முன்வரவேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை கட்சி நிா்வாகியின் இல்ல விழாவில் கலந்துகொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுகவை எதிா்கொள்ளும் ஆற்றல் எடப்பாடி கே.பழனிசாமிக்கு உள்ளது. ஒன்றரைக்கோடி தொண்டா்களின் விருப்பத்தின்படி அவரது ஒற்றைத் தலைமையை ஓ.பன்னீா்செல்வம் ஏற்க முன்வரவேண்டும்.

கட்சியில் அனைத்து உச்சபட்ச நிலையையும் அடைந்தவா் ஓ.பன்னீா்செல்வம். அவரது உயரத்தை யாராலும் தொட்டுப்பாா்க்க முடியாது. அது ஜெயலலிதா கொடுத்த பரிசு. தொண்டா்கள் மத்தியில் அவருக்கு நல்ல மரியாதை உள்ளது.

அவா் கசப்பான நிகழ்வுகளை மறந்து கட்சி மற்றும் தொண்டா்களின் நலனுக்காக எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு, பொதுக்குழுவில் அவரை முன்மொழிய வேண்டும் என்றாா்.

அப்போது, மாவட்டச் செயலாளா் முனிசாமி, நகரச் செயலா் பால்பாண்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com