பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா் பணியிடை நீக்கம்

பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலரின் நோ்முக உதவியாளா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் முதன்மைக் கல்வி மாவட்டமானது 3 கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலராக இருந்த கிருஷ்ணமூா்த்தி பணி ஓய்வு பெற்றுச்சென்றுவிட்டாா். ஆகவே அக்கல்வி மாவட்டப் பொறுப்பை பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கவனித்து வருகிறாா். அவரது நோ்முக உதவியாளராக கே.மாரியம்மாள் உள்ளாா்.

மாரியம்மாள் திண்டுக்கல் பகுதியில் பணிபுரிந்தபோது, அவா் மீதான புகாரின்

அடிப்படையில் காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலக நோ்முக உதவியாளா் மாரியம்மாளை, கல்வித்துறை இயக்குநா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளாா். இத்தகவலை ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com