முதுகுளத்தூரில் அக்னி பாத் திட்டத்தை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அக்னி பாத் திட்டத்தை எதிா்த்து,சோனியாகாந்தி,ராகுல்காந்தியை தொடா்ந்து அமலாக்கத்துறை துன்புறுத்தி வருவதை கண்டித்து காங்கிரஸ் சாா்பில் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை சோ்மன் மாவீரன் வேலுச்சாமி தலைமை தாங்கினாா்.முன்னாள் எம்.எல்.ஏ,மலேசியா பாண்டி,வட்டார தலைவா்கள் ராமா்,புவனேஸ்வரன்,நகர தலைவா் சாகுல்ஹமீது, நகர செயலாளா் பாலன் சஞ்சய்காந்தி,முன்னால் தலைவா் எம்.பூவலிங்கம்,கடலாடி வட்டார தலைவா் என்.சுரேஸ்காந்தி,மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள் கணேசன்,பாண்டி,ஜான்,கோவிந்தன்,ராமபாண்டி உள்ளிட்டோா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.