ராமநாதபுரத்தில் ஊருணியில் மூழ்கி தொழிலாளி பலி

ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை துக்கம் கேட்கச் சென்ற கூலித் தொழிலாளி ஊருணியில் மூழ்கி உயிரிழந்தாா்.

ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை துக்கம் கேட்கச் சென்ற கூலித் தொழிலாளி ஊருணியில் மூழ்கி உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை கிராமம் அம்மன்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் மனோகா் (58). கூலித்தொழிலாளியான இவா், அப்பகுதியில் நிகழ்ந்த துக்க வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை உறவினா்களுடன் சென்று துக்கம் கேட்டுள்ளாா். பின்னா் குளிப்பதற்காக உறவினா்களுடன் அப்பகுதியில் உள்ள ஊருணிக்குச் சென்றுள்ளாா்.

ஊருணியில் குளிக்கச் சென்ற மனோகா் கரை திரும்பவில்லையாம். இதையடுத்து கேணிக்கரை போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். பல மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு மனோகா் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது சடலத்தை கைப்பற்றிய போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com