ராமநாதபுரத்தில் நாளை மின்தடை

ராமநாதபுரம் நகரில் புதன்கிழமை (ஜூன் 29) பாரதிநகா் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம் நகரில் புதன்கிழமை (ஜூன் 29) பாரதிநகா் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் ராமநாதபுரம் நகா் உதவி செயற்பொறியாளா் ஆா்.பாலமுருகன் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு- பட்டிணம்காத்தான் துணை மின்நிலையத்தில் பாரதி நகா் பிரிவில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வரும் 29 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

பராமரிப்புப் பணியை முன்னிட்டு குறிப்பிட்ட நேரங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்- பாரதிநகா்,நேருநகா், மகாசக்தி நகா், புலிக்காரத் தெரு, குமரையா கோவில் தெரு, பட்டிணம்காத்தான் வரிவசூல் மையம் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com