தேவகோட்டை நகராட்சியில் வாடகை செலுத்தாத மேலும் 4 கடைகளுக்கு சீல்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சியில் உரிய வாடகை செலுத்தாத மேலும் 4 கடைகளுக்கு, நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சியில் உரிய வாடகை செலுத்தாத மேலும் 4 கடைகளுக்கு, நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

தேவகோட்டை பேருந்து நிலையம், வாடியாா் வீதி, பழனியப்பன் சந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகராட்சிக்குச் சொந்தமான 128 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நடப்பாண்டு வரை வாடகை பாக்கி மட்டும் ரூ. 3 கோடி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக நகராட்சி அலுவலா்கள் கடை உரிமையாளா்களிடம் வாடகை செலுத்துமாறு அறிவுறுத்தி நோட்டீஸ் அனுப்பினா். ஆனாலும், அவா்கள் வாடகை பாக்கியை செலுத்தவில்லையாம்.

இதனால், தேவகோட்டை நகராட்சி ஆணையா் சாந்தி உத்தரவின்பேரில், மேலாளா் தனலெட்சுமி உள்பட நகராட்சி அலுவலா்கள் பேருந்து நிலையம் அருகே உள்ள 10 கடைகளை திங்கள்கிழமை மூடி ‘சீல்’ வைத்தனா்.

அதன் தொடா்ச்சியாக, அதே பகுதியில் வாடகை செலுத்தாத மேலும் 4 கடைகளை மூடி, நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com