ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், உச்சிப்புளி துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 15) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மண்டபம் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பாம்பன் ஏகேஎஸ் தோப்பு, வடக்குத் தெரு, மேற்குத் தெரு, அம்பலக்காரத் தெரு, தோப்புக்காடு, மண்டபம் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்படும்.
இதேபோல், பெருங்குளம் துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் உச்சிப்புளி, தாமரைக்குளம், நாகாச்சி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என, ராமநாதபுரம் மின்வாரியம் ஊரக உதவிச் செயற்பொறியாளா் சி.செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.