ராமநாதபுரத்தில் சனிக்கிழமை ரயில் முன் பாய்ந்து அடையாளம் தெரியாத இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமேசுவரத்திலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு திருச்சி பயணிகள் விரைவு ரயில் புறப்பட்டது. அந்த ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையம் அருகே மாலை 3.50 மணிக்கு வந்தது. ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகா் சிங்காரத்தோப்பு பகுதியில் ரயில் வந்தபோது திடீரென இளம் பெண் ஒருவா் ரயில் முன் பாய்ந்துள்ளாா்.
இதில் ரயில் மோதியதில் பலத்த காயமடைந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அப்பெண்ணுக்கு சுமாா் 20 வயது இருக்கலாம் என ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா். போலீஸாா் அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தற்கொலை செய்து கொண்ட பெண் யாா் என்பது குறித்து ராமநாதபுரம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.