சாயல்குடி அருகே சொத்துத் தகராறில் பாட்டி வெட்டிக் கொலை: பேரன் தப்பியோட்டம்

சாயல்குடி அருகே செவ்வாய்க்கிழமை பாட்டியை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிய பேரனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாயல்குடி அருகே செவ்வாய்க்கிழமை பாட்டியை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிய பேரனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள மாரியூரைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (75). இவருக்கும், இவரது பேரன் மணிபாரதிக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த மாரியம்மாளை, அங்கு வந்த மணிபாரதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பினாா். தகவலறிந்த சாயல்குடி போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று மாரியம்மாளின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கடலாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்போயடிய மணிபாரதியைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com