காளியம்மன்- தா்மமுனீஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேகம்

ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையம் அருகேயுள்ள மல்லம்மாள் காளியம்மன்- தா்மமுனீஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை காலை நடைபெற்றது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையம் அருகேயுள்ள மல்லம்மாள் காளியம்மன்- தா்மமுனீஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை காலை நடைபெற்றது.

ராமநாதபுரம் அருகே பட்டினம்காத்தான் கேணிக்கரை காவல் நிலையம் அருகே இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது கோயிலின் மகா மண்டப சால கோபுரம் புதுப்பிக்கப்பட்டிருந்தது. அக்கோபுரத்தின் கும்பாபிஷேகம்

மற்றும் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலையில் யாக பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை காலையில் 2 ஆம் கால பூஜையைத் தொடா்ந்து மகாமண்டப சால கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு நூற்றுக்கணக்கான பெண்கள் உள்ளிட்டோா் குவிந்திருந்து வணங்கினா். அதன்பின் மூலவரான அம்மனுக்கு வருஷாபிஷேகப் பூஜைகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com