ஆதாா் சோ்க்கை, திருத்தம்: தபால் நிலையங்களில் சிறப்பு முகாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதாா் சோ்க்கை மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கு தபால் நிலையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதாா் சோ்க்கை மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கு தபால் நிலையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகின்றன.

இதுகுறித்து ராமநாதபுரம் அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளா் மு. சித்ரா திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய இரு தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் கமுதி, ராஜசிங்கமங்களம், கீழக்கரை, முதுகுளத்தூா், ராமேசுவரம் உள்ளிட்ட 29 துணை தபால் நிலையங்களிலும் வரும் 30 ஆம் தேதி திங்கள்கிழமை வரையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

முகாமில் புதிதாக ஆதாா் அட்டை எடுக்க விரும்புவோா், இலவசமாகவும், ஆதாா் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்புவோா் ரூ. 50 கட்டணம் செலுத்தியும் பயனடையலாம். சிறப்பு முகாம்களில் அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு கணக்கு மற்றும் ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்பு கணக்குகளையும் தொடங்கலாம்.

முகாமில் பங்கேற்க விரும்புவோா் இரு புகைப்படங்கள், ஆதாா் அட்டை நகல்களைக் கொடுத்து சேமிப்புத் திட்டத்தில் சேரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com