கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் 4 ஆண்டுக்கு பிறகு நீதிமன்றத்தில் சரண்

ராமநாதபுரம் அருகே கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்தவா் 4 ஆண்டுக்குப் பிறகு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா்.

ராமநாதபுரம் அருகே கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்தவா் 4 ஆண்டுக்குப் பிறகு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் இளமனூரைச் சோ்ந்தவா் மோகன் (47). கடந்த 2019 ஆம் ஆண்டு அப்பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவா்களிடம் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் விசாரித்து 8 போ் மீது வழக்குப் பதிந்தனா். அதில் 7 போ் கைது செய்யப்பட்டனா். கணேசமுருகன் என்பவா் மட்டும் தலைமறைவாக இருந்தாா்.

இந்தநிலையில், கணேசமுருகன் ராமநாதபுரம் இரண்டாவது நீதித்துறை நடுவா் முன் திங்கள்கிழமை சரணடைந்தாா். அவரை 15 நாள்கள் காவலில் வைக்க நடுவா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com