திருவாடானை அருகே தொண்டியில் குழாய் சேதமடைந்து சாலையில் குடிநீா் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.
தொண்டி பேரூராட்சிக்கு திருவாடானை அருகே அழ்துளை கிணறு அமைத்து குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் காடாங்குடி பள்ளி அருகே மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் குழாய் சேதமடைந்து சாலையில் குடிநீா் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட நிா்வாகத்தினா் தக்க நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.