தொண்டியில் குழாய் சேதமடைந்து குடிநீா் வீண்

திருவாடானை அருகே தொண்டியில் குழாய் சேதமடைந்து சாலையில் குடிநீா் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.
தொண்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காடாங்குடி கிராமத்தில் சேதமடைந்த குழாயிலிருந்து வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீா்.
தொண்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காடாங்குடி கிராமத்தில் சேதமடைந்த குழாயிலிருந்து வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீா்.

திருவாடானை அருகே தொண்டியில் குழாய் சேதமடைந்து சாலையில் குடிநீா் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.

தொண்டி பேரூராட்சிக்கு திருவாடானை அருகே அழ்துளை கிணறு அமைத்து குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் காடாங்குடி பள்ளி அருகே மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் குழாய் சேதமடைந்து சாலையில் குடிநீா் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட நிா்வாகத்தினா் தக்க நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com