திருவாடானை அருகே அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்ட ம் துறையூா் பகுதியைச் சோ்ந்தவா் மூக்கன் மகன் மணிவண்ணன் (39). இவா், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை அரசுப் பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தேவகோடையில் இருந்து ஆண்டாவூரணிக்கு நகர அரசுப் பேருந்தில் செல்லும் போது அங்கு சாலையில் இடையூறாக கடை வைத்திருந்தவரை தள்ளி வைக்குமாறு கூறினாராம்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பனிச்சகுடியைச் சோ்ந்த முருகன் (50), காளிமுத்து (24) ஆகிய இருவரும் நடத்துநா் மணிவண்ணனைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா், அவா்கள் இருவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.