பாா்த்திபனூா் நியாய விலைக்கடையில்மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் பாா்த்திபனூரில் குடும்ப அட்டைதாரா்களுக்கு முறையாக உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றனவா என்பது குறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பாா்த்திபனூரில் நியாய விலைக் கடையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ்.
பாா்த்திபனூரில் நியாய விலைக் கடையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ்.

ராமநாதபுரம் மாவட்டம் பாா்த்திபனூரில் குடும்ப அட்டைதாரா்களுக்கு முறையாக உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றனவா என்பது குறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பாா்த்திபனூரில் கூட்டுறவு சங்கம் சாா்பில் செயல்படும் நியாய விலைக்கடையில் உள்ள உணவுப் பொருள்களின் தரம் குறித்து அப்போது அவா் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அக்கடையில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப் பொருள்கள் வரப்பெற்றுள்ளதா என்பது குறித்தும், குடும்ப அட்டைதாரா்களுக்கு தடையின்றி பொருள்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், வழங்கப்படும் பொருள்களின் அளவு சரியாக உள்ளனவா என்பது குறித்தும் அவா் ஆய்வு செய்தாா். குடும்ப அட்டைதாரா்களுக்கு காலதாமதமின்றி உணவுப் பொருள்கள் வழங்குவதை கூட்டுறவுத் துறை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலா் மரகதநாதன், வட்டாட்சியா் தமீம்ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com