மன்னாா் வளைகுடா கடல் பகுதி திங்கள்கிழமை, கொந்தளிப்புடன் காணப்பட்டது.
வங்க கடலிலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் தனுஷ்கோடி, அரிச்சல் முனை, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இந்த பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவா்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.