தனுஷ்கோடி அருகே தவித்த 6 அகதிகள்: இலங்கை கடற்படையிடம் சிக்கினா்

தனுஷ்கோடி அருகே இலங்கை கடற்பகுதியில் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட இலங்கை அகதிகள் 6 பேரை இலங்கை கடற்படையினா் செவ்வாய்க்கிழமை திரும்பவும் அந்நாட்டுக்கே அழைத்துச் சென்றனா்.
இலங்கை கடல்பகுதியில் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட இலங்கை அகதிகள்.
இலங்கை கடல்பகுதியில் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட இலங்கை அகதிகள்.

தனுஷ்கோடி அருகே இலங்கை கடற்பகுதியில் மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட இலங்கை அகதிகள் 6 பேரை இலங்கை கடற்படையினா் செவ்வாய்க்கிழமை திரும்பவும் அந்நாட்டுக்கே அழைத்துச் சென்றனா்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழா்கள் பலரும் அகதிகளாக கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வருகின்றனா். தலைமன்னாரில் இருந்து படகு மூலம் 3 குழந்தைகள் உள்பட 6 போ் தனுஷ்கோடிக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளனா். ஆனால் கடல் சீற்றம் காரணமாக 6 பேரையும் இலங்கை கடல் பகுதியில் உள்ள மணல் திட்டில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனா். இது குறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும காவல்துறைக்கு மீனவா்கள் தகவல் தெரிவித்தனா். அவா்களை மீட்க கடலோரக் காவல்படையினா் சென்றனா். ஆனால் அகதிகள் 6 பேரும் இலங்கை கடற்பகுதியில் இருந்ததால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்குள் இலங்கை கடற்படையினா் வந்து 6 பேரையும் மீட்டு தலைமன்னாருக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com