வளா்ப்பு நாய்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்தலாம்

வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த புதன்கிழமை (செப். 28) சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் அறிவித்துள்ளாா்.

வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த புதன்கிழமை (செப். 28) சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் புதன்கிழமை (செப்.28) உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. செல்லப்பிராணிகள் வளா்க்கும் பொதுமக்கள் புதன்கிழமை காலையில் அருகாமையில் உள்ள கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை மருத்துவமனைக்கு சென்று நாய்களுக்கு இலவசமாக வெறிநோய்க்கான தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com