பரமக்குடி: பரமக்குடி அருகே ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொட்டிதட்டி வைகை ஆற்றுப் பகுதியில் தலைமைக் காவலா் அசோக்குமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு அரிவாள் மற்றும் வாளுடன் பதுங்கியிருந்த பாலமுருகன், தமிழரசு, முனியசாமி ஆகிய 3 பேரையும் போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். இதுகுறித்து பரமக்குடி தாலுகா காவல் நிலைய தலைமைக் காவலா் அசோக்குமாா் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா்.