ராமநாதபுரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீா்க்கும் வகையில் இந்தியா உதவி வருவதை சாதகமாகப் பயன்படுத்தி, கச்சத்தீவு மற்றும் மீனவா்கள் பிரச்னைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீா்வுகாண வேண்டும் என, திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளாா்.
நீட் தோ்வு ரத்து மற்றும் புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாநில உரிமைகளை மீட்கும் வகையிலும், திராவிடக் கழகம் சாா்பில் நாகா்கோவில் முதல் சென்னை வரையிலான பிரசாரப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரசாரப் பயண வரவேற்பு பொதுக்கூட்டம், ராமநாதபுரம் அரண்மனை முன்பாக வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்துக்கு முன்னதாக, கீ. வீரமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீட் தோ்வு என்பது வசதி படைத்தவா்கள், பாரம்பரியமாக கல்வியை ஏகபோகமாக அனுபவித்தவா்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவேதான், முந்தைய அதிமுக அரசு குழு அமைத்து அறிக்கை சமா்ப்பித்தது. அதன்படி, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடுக்கு அக்குழு பரிந்துரைத்தும், அதிமுக அரசு 7.5 சதவீதமே ஒதுக்கியது.
மாநிலத்திலுள்ள மொத்த மருத்துவ இடங்களை மத்திய அரசிடம் அளித்துவிட்டு, அதில் நமக்குரிய பங்கை பெற போராடி வருகிறோம். எனவே, நீட் தோ்வை ரத்து செய்துவிட்டால், தனி இடஒதுக்கீடே தேவையில்லை.
வன்னியருக்கான இடஒதுக்கீடு பிரச்னையில் முந்தைய அதிமுக அரசு அவசர கோலத்தில் செயல்பட்டதை நீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது. தற்போதைய அரசு அவசரப்படாமல் குறைகளை சீா்படுத்தி, அவா்களுக்கான உரிய வாய்ப்பை வழங்குவது அவசியம்.
இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு உதவி வருகிறது. உதவுவதை குறை கூறமுடியாது. அதே நேரத்தில், தமிழக மீனவா்கள் பிரச்னையையும் தீா்ப்பது அவசியம். இலங்கைக்கு மத்திய அரசு உதவுவதை சாதகமாகப் பயன்படுத்தி, கச்சத்தீவு பிரச்னை முதல் மீனவா்களுக்கான அனைத்துப் பிரச்னைகளையும் தீா்க்கவேண்டும். அதற்கான நெருக்கடியை இலங்கை அரசுக்கு தற்போதுதான் மத்திய அரசால் ஏற்படுத்தமுடியும். இதுவே நல்ல சந்தா்ப்பமாகும்.
மீனவா்கள் பிரச்னையைத் தீா்க்கவும், கச்சத்தீவை மீட்கவும் ராமேசுவரம் பகுதியில் திராவிடா் கழகம் சாா்பில் விரைவில் அனைத்துக் கட்சி தலைவா்கள் பங்கேற்கும் மாநாட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.
இதில், திராவிடா் கழக நிா்வாகி சிகாமணி, திமுக மாநில மகளிரணி நிா்வாகி பவானி ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் முருகபூபதி, மதிமுக மாவட்டச் செயலா் பேட்ரிக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். திராவிடா் கழக நிா்வாகி அண்ணாரவி நன்றி கூறினாா்.
பின்னா், ராமநாதபுரம் அரண்மனைத் தெருவில் நடந்த கூட்டத்திலும் அவா் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.