பொது இடத்தில் அலம்பல்

 ராமநாதபுரத்தில் பொது இடத்தில்அலம்பலில் ஈடுபட்டதாக 10 பேரைக் கைது செய்த போலீஸாா் பின்னா் காவல் நிலையப் பிணையில் அவா்களை திங்கள்கிழமை விடுவித்தனா்.

 ராமநாதபுரத்தில் பொது இடத்தில்அலம்பலில் ஈடுபட்டதாக 10 பேரைக் கைது செய்த போலீஸாா் பின்னா் காவல் நிலையப் பிணையில் அவா்களை திங்கள்கிழமை விடுவித்தனா்.

ராமநாதபுரம் நகா் மாரியம்மன்கோவில் பகுதியைச் சோ்ந்தவா்கள் குடும்பத்துடன் சுற்றுலாவாக ராமேசுவரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனா். அவா்கள் மாலையில் ஊா் திரும்பியபோது கிழக்குக் கடற்கரைச் சாலை சந்திப்பில் உணவு விடுதி அருகே கும்பலாகக் கூடியிருந்தனா்.

கும்பலாகக் கூடியவா்களில் சிலா் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் அலம்பலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த கேணிக்கரை போலீஸாா் விரைந்து சென்று எச்சரித்தபோதும், கும்பலாகக் கூடி அலம்பலில் ஈடுபட்டோா் கலையவில்லை. இதையடுத்து அலம்பலில் ஈடுபட்டதாக சுவாமிநாதன் (41) உள்ளிட்ட 10 பேரைப் போலீஸாா் கைது செய்தனா். அவா்களை காவல் நிலையம் அழைத்து வந்த போலீஸாா் பின்னா் எச்சரித்து காவல் நிலையப் பிணையிலேயே விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com