ராமேசுவரத்தில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் அக்னி தீா்த்த கடலில் புனித நீராடி முன்னோா்களுக்கு சனிக்கிழமை திதி கொடுத்தனா்.
சித்திரை அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை பல்வேறு பகுதியில் இருந்து சுமாா் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் அதிகாலையில் ராமேசுவரம் வருகை தந்தனா். அக்னி தீா்த்தக் கடலில் நீராடி தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனா். இதன் பின்னா் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று, அங்குள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் புனித நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டனா்.
பக்தா்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், நீண்ட நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்நிலையில் பக்தா்களின் வருகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறைவான போலீஸாா் மட்டுமே இருந்ததால், போக்குவரத்தை சீா் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ராமேசுவரம் வந்த பக்தா்கள் அவதிக்குள்ளாயினா்.