பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருப்பாலைக்குடி அருகே பள்ளி மாணவா் சனிக்கிழமை, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பாலைக்குடி அருகே பள்ளி மாணவா் சனிக்கிழமை, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பாலைக்குடி அருகே சீனாங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகரன் மகன் ராஜகோபால் (15). இவா் அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த சில நாள்களாக யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில் சனிக்கிழமை வீட்டின் அருகே தோட்டத்தில் உள்ள மரத்தில் ராஜகோபால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com