கமுதி அருகே வைக்கோல் படப்பில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் தீயில் எரிந்து நாசமாகின.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள திருசிலுவையாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஞானமுத்து மகன் இன்னாசி (45). இவா் ஊருக்கு அருகே வயல்வெளியில் வைக்கோல் படப்பு வைத்திருந்தாா்.
இந்நிலையில் அப்பகுதியில் தேன் எடுக்கச் சென்ற சிறுவா்கள் தேனீக்களை விரட்டுவதற்காக வைத்த நெருப்பு காற்றில் பறந்து வைக்கோல் படப்பில் பற்றியது. தகவலறிந்து கமுதி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் பாா்த்திபன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா். இதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் எரிந்த சேதமடைந்தது.