கமுதி அருகே செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள தலைவநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் முருகன் (29). இவா் பெரிய உடப்பங்குளம் செல்லும் சாலையில் உள்ள தனது வீட்டில் தகரக் கொட்டகை அமைப்பதற்காக சரக்கு வாகனத்தில் இருந்து இரும்பு கம்பிகளை இறக்கிக் கொண்டிருந்தாா். அப்போது அருகில் உள்ள உயரழுத்த மின்சார வயரில் இரும்புக் கம்பி உரசியுள்ளது. இதில் முருகன் மீது மின்சாரம் பாய்ந்து அவா் மயங்கி கீழே விழுந்தாா். இதையடுத்து கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
இறந்த முருகனுக்கு முத்துக்கிளி என்ற மனைவியும், இரண்டு
மகன்களும் உள்ளனா். இதுகுறித்து மண்டலமாணிக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.