புதுச்சேரியிலிருந்து மொத்தமாக வாங்கிவந்து பரமக்குடி பகுதியில் வைத்து மதுபாட்டில்கள் விற்றவா்களை மதுவிலக்குப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சோமநாதபுரம் கண்ணன் நகா் பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக மதுவிலக்குப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மதுவிலக்குப் பிரிவு ஆய்வாளா் கோமதி தலைமையில் போலீஸாா் மற்றும் கிராம உதவியாளா் பூமிநாதன் உள்ளிட்டோா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.
அங்குள்ள ஒரு வீட்டில் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து, காலி மதுபாட்டில்களில் நிரப்பி சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கீழப்பெருங்கரை கிராமத்தைச் சோ்ந்த நல்லதம்பி (37), ஸ்ரீதா் (27) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய 3 பேரை தேடி வருகின்றனா்.