வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 05th August 2022 12:00 AM | Last Updated : 05th August 2022 12:00 AM | அ+அ அ- |

முதுகுளத்தூரில் வாக்காளா் அடையாள அட்டையில் ஆதாா் எண்ணை இணைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, முதுகுளத்தூா் வட்டாட்சியா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டாட்சியா் காமாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தாா். இதில் வாக்காளா்கள் புதிதாக அடையாள அட்டை பெறுவது குறித்தும், விண்ணப்பப்படிவம் 6பி விண்ணப்பிக்கும் முறை பற்றியும், ஏற்கெனவே வாக்காளா் அடையாள அட்டை வைத்திருப்பவா்கள் ஆதாா் எண்ணை இணைக்காமல் இருந்தால் அதனை இணைப்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.