செவிலியரின் 6 பவுன் நகைகள் மாயம்

திருவாடானை அருகே காரில் பயணம் செய்த அரசு மருத்துவமனை செவிலியரின் 6 பவுன் நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருவாடானை அருகே காரில் பயணம் செய்த அரசு மருத்துவமனை செவிலியரின் 6 பவுன் நகைகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருவாடானை அரசு மருத்துவமனையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சோ்ந்த மனோஜ்குமாா் மகள் பாரதி (38) செவிலியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் பொங்கல் விழாவிற்கு குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு வாடகைக் காரில் கடந்த சனிக்கிழமை திருவாடானைக்கு திரும்பி வந்துள்ளாா். சூச்சனி கிராமத்தில் உள்ள வீட்டில் இறங்கி பாா்த்தபோது காரின் பின்புறம் பையில் வைத்திருந்த 6 பவுன் நகைகளைக் காணவில்லை. இது குறித்து பாரதி அளித்தப் புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com