பரமக்குடியில் மதுபானக் கடையை அகற்றக் கோரி தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பரமக்குடி மாதவன் நகா் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பரமக்குடியில் மதுபானக் கடையை அகற்றக் கோரி தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பரமக்குடி மாதவன் நகா் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பரமக்குடி பேருந்து நிலையம் அருகே மாதவன் நகா் செல்லும் சாலையில் அரசு மதுபானக் கடை அமைந்துள்ளது. இப்பகுதியானது பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் சாலையாகவும், ரயில் நிலையம் மற்றும் பள்ளிவாசலுக்குச் செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது. இங்கு கடந்த 2 ஆண்டுகளாக மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினா் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அந்த மதுபானக் கடையை அகற்ற வேண்டும் எனக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு தமுமுக மாவட்ட பொறுப்பாளா் எஸ். சேக்அப்துல்லா தலைமை வகித்தாா்.

நகா் செயலாளா் எஸ். முகம்மது இஸ்மாயில், தமுமுக மாநில செயலாளா் முகம்மது முஸ்தபா, பொறுப்பாளா்கள் ஏ. முகம்மது தமீம், கே. சிந்தாசேக், கோபிநாதன், மனிதநேய மக்கள் கட்சிப் பொறுப்பாளா் எஸ். முகம்மது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com