கடற்கரை வழிவிடுமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

ராமேசுவரத்தில் கடற்கரை ஸ்ரீ வழிவிடுமுருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் கடற்கரை ஸ்ரீ வழிவிடுமுருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் திங்கள்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. மாலையில் இரண்டாம் கால பூஜையும், செவ்வாய்க்கிழமை காலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

அதன்பின்னா் கோவை காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரா் சுவாமி தலைமையில் சிவாச்சாரியாா்கள் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினா். அதன்பின்னா் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதில், பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com