திருவாடானை வட்டம் மருங்கூா் அருகே எஸ்பி. பட்டினம் கிராமத்தில் புறம்போக்கில் இருந்த ஆக்கிரமிப்புகள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்பேரில் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
அப்போது வட்டாட்சியா் ஆா். செந்தில்வேல் முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டி ஆகியோா் மேற்பாா்வையில் ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மண்டல துணை வட்டாட்சியா் ஜஸ்டின் பொ்னாண்டோ, வருவாய் ஆய்வாளா் சிதம்பரம், நில அளவா் தமிழ்ச்செல்வன், கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ், எஸ்.பி. பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவா் சுலைகாபீவி சகுபா் சாதிக் உடனிருந்தனா்.