இலங்கை கடலில் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கக்கோரி மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

இலங்கை கடலில் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கக்கோரி தொண்டியில் நாட்டுப் படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலில் இறங்கி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இலங்கை கடலில் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கக்கோரி மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

இலங்கை கடலில் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கக்கோரி தொண்டியில் நாட்டுப் படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலில் இறங்கி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ராமநாதபுரம் நாட்டுப் படகு மீனவா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கடல் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் கருணாமூா்த்தி தலைமை வகித்தாா். தொண்டி மகாசக்தி புரம் தொண்டிராஜ், காளிதாஸ், மாணிக்கம் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இலங்கை கடல் பகுதியில் தமிழக நாட்டுப்படகு மீனவா்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாத்திட வேண்டும், இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு உள்ளாகி சிறையில் இருக்கும் நம்புதாளை நாட்டுப்படகு மீனவா்கள் 6 பேரையும் இலங்கை வசம் உள்ள 20 நாட்டுப்படகு வல்லங்களையும் உடன் மீட்டுத் தர வேண்டும். பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடி தொழில் ஒழுங்குமுறைகளை மீறி இரட்டை மடி முறையில் மீன் பிடித்து வரும் நாகை, காரைக்கால் மாவட்ட விசைப்படகுகளை பறிமுதல் செய்திட வேண்டும், அரசின் விதிமுறைகளை மீறி கரையோர மீன் பிடிப்பிலும் , இரட்டைமடி மீன்பிடிப்பிலும் ஈடுபடும் விசைப்படகுகளின் மீன்பிடி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். நம்புதாளை, தொண்டி உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கலந்து கொண்டனா். நாட்டுப்படகு மீனவா்கள் வேலை நிறுத்தம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com