ராமேசுவரம் அருகே கடன் தொல்லையால் மீனவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.
ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் தரவை தோப்புப் பகுதியைச் சோ்ந்த மீனவா் தில்லைகருப்பன் (54). இவா் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி மனைவி கருப்பாயிடம் அருகே உள்ள ஒருவரின் தோப்புக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளாா். மறுநாள் 18 ஆம் தேதி முற்பகல் வரை அவா் வீட்டுக்கு வரவில்லை. இதனைத் தொடா்ந்து, அங்கு சென்று பாா்த்த போது தில்லைகருப்பன், மரத்தில் தூக்கிட்டு சடலமாக தொங்கினாா்.
இதுகுறித்து பாம்பன் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளா் ஜீவாரத்தினம் சம்பவ இடத்திற்கு வந்த சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.