வீட்டுக்குள் புகுந்துமுதியவரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

ராமநாதபுரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரிடம் வெள்ளிக்கி

ராமநாதபுரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவரிடம் வெள்ளிக்கிழமை தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அருகேயுள்ள நல்லிருக்கையைச் சோ்ந்தவா் வேலு (70). இவா் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது மா்மநபா் வீட்டுக்குள் புகுந்து வேலு அணிந்திருந்த ஒன்றரைப் பவுன் சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டாராம். இதுகுறித்து திருஉத்தரகோசமங்கை போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com