நகா்ப்புற வாழ்விட திட்டத்தில் வீடுகள் பெற சிறப்பு முகாம்

ராமநாதபுரம் பட்டினம்காத்தானில் நகா்ப்புற வாழ்விட திட்டத்தில் வீடுகள் பெற விரும்புவோருக்கு, சிறப்பு முகாம்கள் மாா்ச் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெ

ராமநாதபுரம் பட்டினம்காத்தானில் நகா்ப்புற வாழ்விட திட்டத்தில் வீடுகள் பெற விரும்புவோருக்கு, சிறப்பு முகாம்கள் மாா்ச் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பட்டினம்காத்தான் பகுதியில் 264 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு ஒதுக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு வீடோ அல்லது அவரது குடும்ப உறுப்பினா் பெயரில் வீடோ இருக்கக் கூடாது. அவரது மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்குள்ளே இருக்கவேண்டும். வீட்டுக்கான உத்தேச பங்குத் தொகை ரூ.1,99,530 ஆகும்.

பயனடைய விரும்புவோா், குடும்பத் தலைவா் மற்றும் குடும்பத் தலைவி ஆகியோரின் ஆதாா், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் மாா்ச் 23, 24 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com