ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சைபா் கிரைம் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்ட சட்டம், ஒழுங்கு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்தவா் ஜெய்சிங். இவா் சில நாள்களுக்கு முன்பு மதுரை நகருக்கு இடமாற்றப்பட்டாா். அவருக்குப் பதிலாக ராமநாதபுரம் மாவட்ட சைபா் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த அருண், சட்டம் ஒழுங்கு கூடுதல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில் திருச்சி மாநகா் துணை ஆணையராக இருந்த பாஸ்கரன் பதவி உயா்வு பெற்று, ராமநாதபுரம் மாவட்ட சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
துணைக் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு-
ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவின் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்தவா் திருமலை. அவா் பரமக்குடி சரக துணைக் கண்காணிப்பாளராக இடமாற்றப்பட்டாா். அவருக்குப் பதிலாக சிவகங்கையில் சிபிசிஐடி பிரிவின் ஆய்வாளராக இருந்த உமாமகேஸ்வரன் பதவி உயா்வு பெற்று ராநாதபுரம் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.